உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளி செல்லும் சாலை சேதம் சரி செய்ய மக்ïïïகள் வலியுறுத்தல்

பள்ளி செல்லும் சாலை சேதம் சரி செய்ய மக்ïïïகள் வலியுறுத்தல்

குளித்தலை : குளித்தலை எம்.பி.எஸ்., அக்ரஹாரம் பகுதியில் பல மாதங்களாக, சாலை வசதி மேற்கொள்ளாததால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளது. குளித்தலை எம்.பி.எஸ். சாலை வழியாக, ஐந்து பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கிழ், இந்த சாலை தோண்டி பறிக்கப்பட்டு, ஏழு மாதங்களாக சரி செய்து தராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதை முன்னிட்டும், பொது மக்களின் கோரிக்கையை ஏற்றும், சேதமடைந்துள்ள சாலையை சீர் செய்ய வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ