மக்கள் மருந்தகத்தில் ரூ.10 ஆயிரம் திருட்டு
ஈரோடு, ஈரோடு, ஈ.வி.என். சாலையில், அரசு மருத்துவமனை அருகே மக்கள் மருந்தகம் செயல்படுகிறது. பெரிய சேமூரை சேர்ந்த மாதேஸ்வரன், 58, மருந்தக உரிமையாளர். நேற்று காலை கடை திறக்க வந்தார். மரக்கதவு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராவில் வைத்திருந்த, 10 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.