உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடு, கோழி விற்பனை

ஆடு, கோழி விற்பனை

கிருஷ்ணராயபுரம்: சந்தையூர், வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் சீரான விலையில் விற்கப்பட்டன.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்தில், இரும்பூதிப்-பட்டி சந்தையூரில் வாரச்சந்தை செயல்படுகிறது. இங்கு காய்க-றிகள் மற்றும் ஆடு, கோழிகள் விற்கப்படுகிறது. விவசாயிகள் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் ஆடு, கோழிகள் கூடுத-லாக விற்பனையானதுடன், விலையும் கூடியிருந்தது. ஆனால் நேற்று சீரான விலையில், விற்பனையானது. ஏழுகிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது நாட்டு கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடு. கோழி-களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ