உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்தியவர் கைது சரக்கு வாகனம் பறிமுதல்

மணல் கடத்தியவர் கைது சரக்கு வாகனம் பறிமுதல்

குளித்தலை, குளித்தலை அடுத்த கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி, 29. நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் காவிரி ஆற்றில் இருந்து, பொலிரோ பிக்கப் சரக்கு வாகனத்தில், மணலை கடத்திக் கொண்டு சென்றார். கட்டளை மலையப்பபுரம் காவிரி ஆற்று சாலையில், வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி, மாயனுார் போலீசார் சோதனை செய்தனர். அதில், 1 யூனிட் காவிரி ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது.மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அம்பிகாபதியை கைது செய்ததுடன், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை