மேலும் செய்திகள்
ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
02-Sep-2024
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு தேவையான தண்ணீர் வாய்க்கால் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.வாழைத்தார்கள் அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை நடக்கிறது. நேற்று பூவன் தார் ஒன்று, 250 ரூபாய், கற்பூரவள்ளி தார், 150 ரூபாய், ரஸ்தாளி தார், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
02-Sep-2024