உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டுனர்கள் அவதி

சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டுனர்கள் அவதி

கரூர்: கரூரில் சாலையில், நேற்று கழிவுநீர் ஆறாக ஓடியதால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர்.கரூர், லைட்ஹவுஸ் கார்னர் மக்கள் பாதை பகுதியில், குடியிருப்-புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள, சாக்-கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்-கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இந்நிலையில், நேற்று லைட் ஹவுஸ் கார்னர் மக்கள் பாதை பகு-தியில், சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடியது.அப்போது, துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்-டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே, சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவ-சியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ