உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்கு

கரூர்-ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்கு

கரூர்: கரூர்-ஈரோடு மற்றும் கோவை சாலை பிரிவில், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எரியாமல் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர்-கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் தனியார், அரசு பள்ளிக்கூடங்கள், தனியார் வங்கி தலைமை அலுவலகம், காவலர் குடியிருப்பு மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், கோவை, ஈரோடு சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது, அந்த சிக்னல் விளக்கு சேதமடைந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கரூர் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் உள்-ளனர்.இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர்-கோவை மற்றும் ஈரோடு சாலை பிரிவில், சேதமடைந்து, எரியாத நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளை, உடனடியாக சரி செய்ய நட-வடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி