உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆனி மாத அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி மாத அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு, ஆனி மாத அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்பு சாறு, தேன், விபூதி உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் காட்சியளித்தனர்.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* சேமங்கியில் உள்ள, மங்களநாதர் சமேத கமலாம்பிகை கோவிலில் உள்ள காலபைரவர், புன்னம் சத்திரம் அருகே புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள கால பைரவர், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை