உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோம்புப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம்

கோம்புப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம்

கரூர், டிச. 27- கரூர் மாவட்டம், நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள, ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், மார்கழி மாத ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.இதில், பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், குட்டக்கடை --புன்னம் செல்லும் சாலையில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோவிலிலும் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி