மேலும் செய்திகள்
மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
21-May-2025
கரூர், புகழிமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு நேற்று வைகாசி மாத கிருத்திகையையொட்டி, பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும், வைகாசி மாத கிருத்திகையை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது. * கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. பாலதண்டாயுதபாணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
21-May-2025