உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழிமலை கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

புகழிமலை கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

கரூர், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆவணி மாத கிருத்திகையை யொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், மூலவருக்கு ஆவணி மாத கிருத்திகையையொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம்சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.* புன்னம் சத்திரம் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், ஆவணி மாத கடைசி வெள்ளியையொட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பிறகு, மூலவர் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி