மேலும் செய்திகள்
புகழிமலை கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை
13-Sep-2025
மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
15-Sep-2025
கரூர்: புரட்டாசி தேய்பிறை சஷ்டியையொட்டி, கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
13-Sep-2025
15-Sep-2025