மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா
05-Oct-2025
கரூர் : கரூரில் நேற்று, பாதாள சாக்கடை மூடி உடைந்து, கழிவுநீர் சாலையில் ஓடியது. இதனால், துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.கரூர் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்கள், பாதாள சாக்கடை திட்ட ராட்சத குழாய்களில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்படும் பட்சத்தில், அதை சரி செய்யும் விதத்தில், வட்ட வடிவில் மேல் பகுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது.அதன் மேல், சிமென்ட் மூடி வைக்கப்பட்டுள்ளது. மூடிகள் மீது பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதால், கரூர் நகரின் பல இடங்களில் உடைந்துள்ளது. அதை, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்வது இல்லை. இந்நிலையில், நேற்று காலை பாதாள சாக்கடை மூடி உடைந்து, கழிவு நீர் சாலையில் சென்றது. இதனால் துர்நாற்றம் வீசியது. மேலும் கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர்.கரூர் நகரின் பல பகுதிகளில், பாதாள சாக்கடை மூடி உடைந்த நிலையில் உள்ளது. அதை சரி செய்யாமல், மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். இதனால், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் கவன குறைவால் பாதாள சாக்கடை மூடி மீது சென்று, கீழே விழ வாய்ப்புள்ளது. பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன், உடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மாற்றவும், கழிவுநீர் வெளியேறும் பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்யவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025