உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆசிரியரிடம் பணம் பறித்த வாலிபரை தேடும் பணி தீவிரம்

ஆசிரியரிடம் பணம் பறித்த வாலிபரை தேடும் பணி தீவிரம்

ஆசிரியரிடம் பணம் பறித்தவாலிபரை தேடும் பணி தீவிரம்குளித்தலை, செப். 28-குளித்தலையில், ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.நேற்று முன்தினம் காலை, குளித்தலை பஸ் ஸ்டாண்டு எதிரில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்து வந்த, ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரை தாக்கி விட்டு, மர்ம நபர் ஒருவர் 7,000 ரூபாய் உடன் காரில் தப்பினார்.மையத்தில் இருந்த கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. தப்பிய மர்ம நபரை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, குளித்தலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி