திருக்குறள் திருப்பணி நுண்பயிற்சி வகுப்பு
கரூர், கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், திருக்குறள் திருப்பணி நுண்பயிற்சி வகுப்பு, தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.அதில், உலக பொதுமறையாக விளங்கும், திருக்குறள் நுால் குறித்து, ஒருங்கிணைப்பாளர் மேலை பழனியப்பன் விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து, நுண் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருக்குறள் குறிப்பேடு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பேராசிரியர் திருமூர்த்தி, ஆசிரியை சாருமதி, சரவணன், பிச்சைமுத்து, ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.