உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் முள் செடிகள் ஓட்டுனர்கள் அவஸ்தை

சாலையில் முள் செடிகள் ஓட்டுனர்கள் அவஸ்தை

சாலையில் முள் செடிகள்ஓட்டுனர்கள் அவஸ்தைகிருஷ்ணராயபுரம், டிச. 11-வரகூர் பகுதியில் இருந்து, சரவணபுரம் செல்லும் தார் சாலையின் இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர் பகுதியில் இருந்து, சரவணபுரம் பகுதிக்கு தார் சாலை செல்கிறது. இந்த சாலையை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். மேலும் லாரி, பஸ்களும் சென்று வருகின்றன. தற்போது, சரவணபுரம் சாலையின் இருபுறமும், சமீபத்தில் பெய்த மழை காரணமாக அதிகமான முள் செடிகள் வளர்ந்து, புதர்போல் மண்டி வருகிறது. இதனால், சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புகளை சந்திந்து வருகின்றனர். மேலும், முள் செடிகளால் வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படுகிறது. எனவே, சாலையில் வளர்ந்து வரும் முள் செடிகளை வெட்டி அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ