மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு வானுார்தி ஏணி பயிற்சி
07-Jun-2025
கரூர், கரூர் அருகே, புதிய தீயணைப்பு துறை வீரர்களுக்கு, பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது.தமிழக தீயணைப்பு துறைக்கு சமீபத்தில் புதிதாக, 650 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும், மண்டலம் வாரியாக ஆறு மையங்களில், புதிய தீயணைப்பு வீரர்களுக்கு அடிப்படை பயிற்சி முகாம் தொடங்கியது. திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட, 90 தீயணைப்பு வீரர்களுக்கு, கரூர் அருகே வேட்டமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் கடந்த ஏப்., 2ல், பயிற்சி முகாம் தொடங்கியது. முகாமில், தீயணைப்பு கருவிகள் குறித்த பயன்பாடு, நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி, ஆபத்து காலங்களில் பொதுமக்களை காப்பாற்ற பயிற்சி உள்ளிட்ட, அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நேற்று நடந்த நிறைவு விழாவில், விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முகாமில் சிறப்பாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் குமார், பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிறைவு விழாவில், பயிற்சி முகாம் முதல்வர் வடிவேல், துணை முதல்வர் கருணாகரன், மாவட்ட உதவி அலுவலர்கள் கோமதி, திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.பயிற்சி பெற்ற, புதிய வீரர்கள் தமிழகம் முழுவதும் உள்ள, தீயணைப்பு நிலையங்களில் விரைவில், பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.
07-Jun-2025