உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரக்கிளைகள்க்ஷ

வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரக்கிளைகள்க்ஷ

கரூர்:கரூர் மாநகரை சுற்றி, சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்சாலை துறை சார்பில், ஊர்ப்பெயர், கிலோ மீட்டர் விபரம், செல்ல வேண்டிய வழி ஆகியவை குறித்த தகவல் வழிகாட்டி போர்டுகளில் இடம் பெற்றுள்ளது.பல சாலைகளில் வழிகாட்டி போர்டுகளை மரக்கிளைகள் மறைத்துள்ளன. இதனால், வெளி மாநில லாரி ஓட்டுநர்கள், சுற்றுலா பஸ், வேன் மற்றும் கார் டிரைவர்கள் வழிகாட்டி போர்டுகளில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் அவதிப் படுகின்றனர்.எனவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டுகளை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ