டர்ப் கிரிக்கெட் மைதானம் கரூரில் திறப்பு
கரூர், கரூர் தெரசா கார்னரில், புதிதாக வீரு டர்ப் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா, நேற்று நடந்தது.அதில், கிரிக்கெட் மைதானத்தை கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். விழாவில், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்டல தலைவர் ராஜா, கவுன்சிலர் பாண்டியன், தி.மு.க., செயற்குழு உறுப்பினர் செந்தில், கிரிக்கெட் மைதானம் பொறுப்பாளர் தினேஷ் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.