உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கரூர், கரூர் அருகே, கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் மேட்டுமகாதானபுரம் வாய்க்கால் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கம்மநல்லுார் பகுதியை சேர்ந்த திருமுருகன், 28, மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், 30, ஆகிய இரண்டு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 1,900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை