உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெள்ளியணை ரயில்வே குகைவழிப்பாதையில் எரியாத விளக்கு

வெள்ளியணை ரயில்வே குகைவழிப்பாதையில் எரியாத விளக்கு

கரூர்: வெள்ளியணை அருகே, ரயில்வே குகை வழிப்பாதையில் விளக்-குகள் எரியாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர்-திண்டுக்கல் ரயில்வே இருப்பு பாதையின் கீழ், வெள்ளி-யணை அருகே சின்னம நாயக்கன்பட்டி பிரிவில் இருந்து, கத்த-ளாப்பட்டி புதுார் சாலையில், குகை வழிப்பாதை உள்ளது. அதன் வழியாக, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்-றனர். குறிப்பாக செல்லிபாளையம், கத்தாளப்பட்டி, கொங்கு நகர், புதுார், சின்னதம்பி பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த-வர்கள், ரயில்வே குகை வழிப்பாதை வழியாக டூவீலர் மற்றும் கார்களில் செல்கின்றனர். இந்நிலையில், ரயில்வே குகை வழிப்-பாதையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான விளக்குகள் எரி-யாமல், சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த வழி-யாக இரவு நேரத்தில் செல்வோர் அவதிப்படுன்றனர். மேலும், குகைவழிப்பாதையை சுற்றியுள்ள காலி இடங்களில், சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்தும் செயல்களில் ஈடுபட்-டுள்ளனர். சில சமயங்களில், வழிப்பறி சம்பவங்களும் நடக்கி-றது. எனவே, ரயில்வே குகை வழிப்பாதையில், எரியாத விளக்-குகளை எரிய வைக்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை