மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கரூர்: மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பகுதிக்கு குறுவை சாகுப-டிக்காக கடந்த, 12ல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 22 ஆயிரத்து, 358 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 24 ஆயி-ரத்து, 316 கன அடியாக அதிகரித்தது.அதில், 23 ஆயிரத்து, 496 கன அடி தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரி-யாற்றில் திறக்கப்பட்டது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்காலில், கிருஷ்ண-ராயபுரம் பாசன வாய்க்காலில், 820 கன அடி தண்ணீர் திறக்கப்-பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்-மட்டம், 23.66 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்-ளது.