உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் காந்திகிராமத்தில் வடிகால் துார் வாரப்படுமா

கரூர் காந்திகிராமத்தில் வடிகால் துார் வாரப்படுமா

கரூர்: கரூர், காந்தி கிராமம் பகுதியில் சுத்தம் செய்யப்படாத சாக்கடை வாய்க்காலால், மழை பெய்யும் போது, சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுகிறது. கரூர் காந்திகிராமம் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்-புகள் உள்ளன. இங்கு, தெருக்களில் மழைநீர் கால்வாய் செல்கி-றது. பல சாக்கடை கால்வாய்கள், நீண்ட காலமாக துார் வாரப்ப-டாமல் உள்ளது. கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிக-ளவில் தேங்கியுள்ளது. மண்மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் போது, சாலையில் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, கால்வாயை துார்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ