உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில் மோதியதில் தொழிலாளி பலி

ரயில் மோதியதில் தொழிலாளி பலி

கரூர், கரூர் மாவட்டம், நொய்யல் மறவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்,61; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, வேலாயுதம்பாளையம் அருகே மறவாப்பாளையத்தில், கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு ரயில் கணேசன் மீது மோதியது. அதில், கணேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி கரூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை