உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசு மருந்து அடிக்கும் பணியில் தொழிலாளர்கள்

கொசு மருந்து அடிக்கும் பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், இரவு நேரங்களில் கொசு தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று டவுன் பஞ்., சார்பில் தாலுகா அலுவலகம் பகுதி, மாரியம்மன் கோவில், பகவதியம்மன் கோவில், மஞ்சமேடு ஆகிய இடங்களில் கொசு மருந்து அடிக்கும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடு-பட்டனர். டவுன் பஞ்சாயத்து சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சண்முகம் பணியை பார்-வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !