மேலும் செய்திகள்
பிரதோஷத்தை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரருக்கு பூஜை
11-May-2025
குளித்தலை: பிரதோஷத்தையொட்டி, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், சுற்றுப்பகு-தியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபு-ரீஸ்வரர், குளித்தலை மீனாட்சிசுந்தரேஸ்வர், மேட்டுமருதுார் ஆராஅமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்-பள்ளி ஏகாம்பரேஸ்வரர், பெரியபாலம் நதி ஈஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவில் சின்னரெட்டிய-பட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்-வரர், இடையப்பட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்த-ரேஸ்வரர் உள்ளிட்ட பகுதி சிவாலங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
11-May-2025