உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாகனம் மோதி வாலிபர் சாவு

வாகனம் மோதி வாலிபர் சாவு

வாகனம் மோதி வாலிபர் சாவுஅரவக்குறிச்சி, நவ. 29-மலைக்கோவிலுாரில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலுார் பகுதியில் உள்ள, குடகனாறு பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணியளவில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, நாகம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை