உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆற்றில் பெண் சடலம் மீட்பு

ஆற்றில் பெண் சடலம் மீட்பு

ஆற்றில் பெண் சடலம் மீட்புஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளி பகுதியில் தென்பெண்ணை ஆற்றில், 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக, மோரனப்பள்ளி வி.ஏ.ஓ., சபரீஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. அவர் புகார் படி, ஹட்கோ போலீசார் ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர். இறந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை