உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

ஓசூர்: -கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலி-தாவின், 77வது பிறந்த நாள் விழா, ஓசூர், பாகலுார் ஹவுசிங் போர்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்-டது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செய-லாளர் சென்னகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் துாவி, கேக் வெட்டி பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு வழங்கப்பட்டது. மேலும், 1,000 பேருக்கு சிக்கன் பிரியாணி, ஹாட்பாக்ஸ் வழங்கப்-பட்டன. ஓசூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த, 12 குழந்தைகளுக்கு, மாவட்ட செயலாளர் பாலகி-ருஷ்ணாரெட்டி தங்க மோதிரம் அணிவித்தார். 400 பேருக்கு பால், பிரட், வழங்கப்பட்டன. பகுதி செயலாளர் ராஜி, ஜெ.பேரவை இணை செயலாளர் செல்வம், பகுதி செயலாளர் சந்தோஷ், இளைஞர், இளம்-பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, முன்னாள் நகர செயலாளர் நாராயணன், கவுன்சிலர் குபேரன் உட்பட பலர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ