கர்நாடகா மாநில மதுபானம் கடத்திய கார் டிரைவர் கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை ஸ்டேஷன் போலீசார், தொட்-டேகவுண்டனுாரில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்-போது, அவ்வழியாக வந்த டாடா இண்டிகோ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநில மதுபானங்கள் இருந்-தன. இதனால், காரை ஓட்டி வந்த டிரைவரான, திருப்பத்துார் மாவட்டம், கெலகாம்பர் பகுதியை சேர்ந்த சந்திரன், 55, என்பவ-ரிடம் விசாரித்தனர். இதில், கர்நாடகாவில் இருந்து, திருப்பத்துா-ருக்கு மதுபானங்களை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால், சந்-திரனை கைது செய்த போலீசார், 1.74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,440 குவாட்டர் பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்-தனர்.