10ம் வகுப்பு கணித தேர்வில்424 மாணவர்கள் ஆப்சென்ட்
10ம் வகுப்பு கணித தேர்வில்424 மாணவர்கள் 'ஆப்சென்ட்'தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், நேற்று நடந்த, 10ம் வகுப்பு கணிததேர்வில், 424 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம், 28 அன்று தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில், 94 தேர்வு மையங்களில், 225 அரசு பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 88 தனியார் பள்ளிகள் என, 318 பள்ளிகளை சேர்ந்த, 9,610 மாணவியர், 10,426 மாணவர்கள் என, 20,036 மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதயிருந்தனர். இதில், முதல் நாள் தமிழ் தேர்வில், 264 மாணவர்கள், 133 மாணவியர் என, 397 பேர் ஆப்சென்ட் ஆகினர். நேற்று நடந்த கணித தேர்வில், 280 மாணவர்கள், 144 மாணவியர் என, 424 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.