உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் 1,314 பேர் முகாமில் தங்கவைப்பு

ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் 1,314 பேர் முகாமில் தங்கவைப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகாக்களில் வெள்ளம் பாதித்த பகுதிகள், நிவாரண முகாம்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி பகுதி-களில் கன மழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதைய-டுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் முத்துசாமி நேற்று வந்தார். அவர், கூறியதாவது:ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, போச்சம்பள்ளி, அர-சம்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தொப்பிடிகுப்பம் உள்பட, 7 நிவா-ரண முகாம்களில் மொத்தம், 1,314 பேர் தங்க வைக்கப்பட்டுள்-ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட வச-திகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவை-யான வசதிகளை செய்து தரவும், உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் மதியழகன், பிரகாஷ், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனி-ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ