குடியிருப்பில் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கட சமுத்திரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் மலைபாம்பு இருப்பதாக, வந்த தகவலின் படி, பாப்பி-ரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நேற்று, தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். அங்கு ஆனந்தன் என்பவரின் வீட்டினருகில் இருந்த, 8 அடி அடி நீள மலைபாம்பை பிடித்தனர். அதை பாப்பிரெட்டிப்-பட்டி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனத்துறை-யினர் மலைப்பாம்பை. ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியில் விட்டனர்.