உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கடத்துார் சந்தையில் வெற்றிலை ரூ.2.40 லட்சத்துக்கு விற்பனை

கடத்துார் சந்தையில் வெற்றிலை ரூ.2.40 லட்சத்துக்கு விற்பனை

பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துாரில் நேற்று நடந்த வெற்றிலை வாரச்சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில், 20க்கும் மேற்பட்ட கிரராமங்களை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்றிலை, 7,000 முதல், 15,000 ரூபாய் வரை விற்றது. நேற்று, 7,000 முதல், 14,000 ரூபாய் வரை விற்பனையானது. சந்தையில், கடந்த வாரத்தை விட, 1,000 ரூபாய் வெற்றிலை குறைவாக விற்றது. நேற்று மொத்தம், 26 வெற்றிலை மூட்டைகள், 2.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை