உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பிரத்யங்கிரா தேவி கோவிலில்மிளகாய் வத்தல் யாகம்

பிரத்யங்கிரா தேவி கோவிலில்மிளகாய் வத்தல் யாகம்

பிரத்யங்கிரா தேவி கோவிலில்மிளகாய் வத்தல் யாகம் ஓசூர், டிச. 17-ஓசூர் அருகே, மோரனப்பள்ளியில் ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பவுர்ணமியையொட்டி, மூலவர் மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும், தொடர்ந்து, மிளகாய் வத்தல் யாகமும் நடந்தது. ஓசூர் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள், பில்லி, சூனியம், செய்வினை, மாங்கல்ய தோஷம், பித்ரு தோஷம் நீங்க, மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் போட்டு வழிபட்டனர். மேலும், சர்ப தோஷம், திருமண தோஷம் நீங்க, ராகு, கேது பரிகார பூஜை நடந்தது. ஓசூர் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ