உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்ஊத்தங்கரை, செப். 26-கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை பி.டி.ஓ., பாலாஜி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பிரியதர்ஷினி, டெப்டி பி.டி.ஓ., காந்திமதி, நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாநில துணைத்தலைவர் ஜெய்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சந்திரமோகன், ஊத்தங்கரை வட்டாரத்திலுள்ள நுகர்வோர் சம்பந்தமான பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டினார். அக்குறைகளை, 10 நாட்களுக்குள் சரிசெய்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டார். வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை, மருத்துவ துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை