கி.கிரி தி.மு.க., வட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகர தெற்கு பகுதி தி.மு.க.,வின், 34 வது வட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் சபாபதி தலைமையில் நடந்தது. செயலாளர் மாதேஷ் வரவேற்றார். மாநகர தெற்கு பகுதி அவைத்தலைவர் ராமச்சந்திரன், கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும், கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். கவுன்சிலர் வரலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். ராமமூர்த்தி நன்றி கூறினார்.