காட்டாற்று வெள்ளம் மீனவர்கள் பாதிப்பு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பாம்பாறு அணையில், 17 மீனவர்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பாம்பாறு அணைக்கு அதிக நீர்வரத்தால் விநா-டிக்கு, 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில் மீனவர்-களின் மீன்பிடி வலைகள், 120 கிலோ அளவிற்கு அடித்து செல்-லப்பட்டது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்-டுள்ளது. மேலும், 5 மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்-டதால், பாம்பாறு அணையிலிருந்து மீன்கள், மீன் குஞ்சுகள் அதி-களவில் வெளியேறியது. இதனால் மீன் குத்தகைதாரர்களுக்கு, 40 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஆய்வு செய்து மீனவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு உரிய நிவா-ரணம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.