தர்மபுரி சந்தையில் பூ விலை உயர்வு
தர்மபுரி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி பூ சந்தையில், நேற்று பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டிலுள்ள பூ சந்தையில் விற்கப்படும் பூக்கள் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இன்று, விநாயகர் சதுர்த்தி மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால், பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம், ஒரு கிலோ குண்டுமல்லி, 800 ரூபாய், கனகாம்பரம், 700, சன்னமல்லி, 750, ஜாதிமல்லி, 400, காக்கடான், 700, பன்னீர் ரோஸ், 160, பட்டன்ரோஸ், 250, சம்பங்கி, 250, சாமந்தி, 180, செண்டுமல்லி, 60 ரூபாய் என விற்பனையானது. நேற்று விலை உயர்ந்து, குண்டுமல்லி, 1,200, கனகாம்பரம், 800, காக்கடான், 800, சன்னமல்லி, 1,000, ஜாதிமல்லி, 600, சம்பங்கி, 300, பன்னீர்ரோஸ், 250, பட்டன்ரோஸ், 300, சாமந்தி, 300, செண்டுமல்லி, 80 ரூபாய் என, 10 டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்