உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 440 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு, வருவாய்த்துறை சார்பில், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய, 3 தாலுகாக்களை சேர்ந்த பார்வையற்ற, 20 மாற்றுத்திறனாளிகள் மற்றும், 13 திருநங்கைகள் என மொத்தம், 33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தர்ராஜ், அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !