/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்
கி. கிரி மாவட்டத்தில் கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலைநிறுத்தம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.சிறு குறு தொழில்கள் பிரிவில் இத்தொழிற்சா-லைகளை நடத்துவதில், வங்கி கடன் வட்டிவி-கிதம் உயர்வு, போலி பில்கள், மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பெரும் சிரமம் ஏற்ப-டுவதாக கிருஷ்ணகிரி கிரானைட் சிறு குறு தொழில்சங்கத்தினர் கூறினர். இது குறித்து கடந்த, 30ல் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பர்கூர், அச்சமங்கலம் உள்ளிட்ட பகுதி-களில் உள்ள, 150க்கும் மேற்பட்ட கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தற்காலிக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.