கிருஷ்ணகிரி வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு, தி.மு.க., இளைஞரணியினர் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென, மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., கூறினார்.கிருஷ்ணகிரியில், தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் வரவேற்றார். மண்டல பொறுப்பாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும், 12ல், கிருஷ்ணகிரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அவரை தி.மு.க., இளைஞரணியை சேர்ந்த கிளை, நகர பேரூர், ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் வெள்ளை சீருடை அணிந்து வரவேற்க வேண்டும். இளைஞரணி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாகவும், செய்த பணிகளின் ஆவணங்களையும் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், சரவணன், சத்தியமூர்த்தி, சங்கர், லயோலா ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.