மண் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை கணவாய்ப்பட்டி பெருமாள் கோவில் பக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்-பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. சரவணன் புகார் படி, கிருஷ்-ணகிரி டவுன் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்-றனர்.