மேலும் செய்திகள்
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
18-Sep-2025
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் வரும், 17ல், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இது குறித்து, கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும், 17, காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பொறியியல், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமும், கல்வித்தகுதியும் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரம் பெற, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343- 291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18-Sep-2025