சைகை மொழி தினம் விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை தொழி தினத்தை ஒட்டி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்க தலைவர் மோகன், பொதுச்செயலாளர் ஜெயவேல், மற்றும் காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.