உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முருகனுக்கு சிறப்பு பூஜை

முருகனுக்கு சிறப்பு பூஜை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 2ல் துவங்கியது. தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்து வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை, 5:30 மணிக்கு, சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகனை, திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர். விழாவில் இன்று மதியம், 3:30 மணிக்கு சூரசம்ஹாரம், சக்திவேலுக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது. நாளை மதியம், 2:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.வரும், 9 மாலை, 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத வேல்முருக பெருமான் திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி