மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நஞ்சாபுரத்தில் உள்ள சன்பீம் லே அவுட் சத்தியா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 44. கூலித்தொழிலாளி; இவரது மகள் வரலட்சுமி, 17, தனியார் கல்-லுாரியில் டிப்ளமோ இ.இ.இ., முதலாமாண்டு படித்து வந்தார்; கடந்த, 7ம் தேதி, வீட்டின் இரண்டாவது மாடிக்கு சென்று, தண்ணீர் தொட்டியில் நீர் உள்ளதா என பார்த்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவி வரலட்சுமி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பினர். அங்கு அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.śśś