உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூத்துக் குலுங்குது மாம்பூக்கள்

பூத்துக் குலுங்குது மாம்பூக்கள்

பேரையூர்,: பேரையூர் தாலுகாவில் சாப்டூர், பழையூர், அணைக்கரைப்பட்டி, வண்டாரி உள்ளிட்ட பகுதிகளில் மா மரங்கள் உள்ளன. இதில் சாப்டூரில் ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டு மரங்கள் உள்ளன.தற்போது மாமரத்தில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. கல்லாமை, சப்பட்டை, பஞ்சவர்ணம் காசாலட்டு, கிளிமூக்கு உட்பட பல ரக மாமரங்கள் உள்ளன. இங்கு விளையும் மாம்பழங்களை வியாபாரிகள் நேரில் வாங்கி கேரளா, மதுரை, தேனி, விருதுநகர் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், ''இந்தாண்டு நாட்டு மரங்களில் பூ நன்றாக பூத்துள்ளது. தற்போது பூவும் பிஞ்சமாக உள்ளது. மே மாதத்தில் மாங்காய்களை பறித்து விற்பனைக்கு அனுப்புவோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ