உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.10 ஆயிரம் லஞ்சம் மின் அதிகாரிகள் கைது

ரூ.10 ஆயிரம் லஞ்சம் மின் அதிகாரிகள் கைது

மேலுார்:மதுரை மாவட்டம் மேலுார் அருகேயுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேஷ், 27. சேக்கிப்பட்டியில் உள்ள தன் விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு மேலுார் மேற்கு மின் வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் ஒசானம் ஜோனி, 45, என்பவரிடம் விண்ணப்பித்தார். அவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கவே ராஜேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று மாலை 'அட்வான்ஸ்' தொகையாக 10 ஆயிரம் ரூபாயை ராஜேஷ் கொடுக்க, அதை வாங்காத ஒசானம் ஜோனி, வணிக ஆய்வாளர் பாண்டியராஜன், 35, என்பவரிடம் கொடுக்குமாறு கூறினார். அவர் பணத்தை வாங்கியபோது டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் சூரியகலா, குமரகுரு ஆகியோர் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை