கண், மனநலம் காக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு: மதுரையில் தினமலர் நாளை நடத்துகிறது
மதுரை : மதுரையில் தினமலர் நாளிதழ் சார்பில் பள்ளிக் குழந்தைகள், அம்மாக்களுக்காக கண், மனநலம் காப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (செப்.1) காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை நடக்கிறது.மக்கள் நலனில் அக்கறையுள்ள தினமலர் நாளிதழ் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் நலன், சமூக நலன் சார்ந்து பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் பள்ளிக் குழந்தைகள், அம்மாக்களுக்காக இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் n 'பள்ளிக் குழந்தைகளின் கண்களை கவனமாக காப்பது எப்படி' என்ற தலைப்பில் ஸ்ரீராம்சந்திரா கிளினிக் கண் சிறப்பு நிபுணர் டாக்டர் எஸ்.சீனிவாசன் n 'தனித்திறன்களை வளர்த்து படிப்பில் சாதிப்பது எப்படி' என ஹர்ஷா மருத்துவமனை மனநல நிபுணர் டாக்டர் எஸ்.சிவசங்கரி n 'தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி' என்ற தலைப்பில் எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எம்.கண்ணன் ஆகியோர் பேசுகின்றனர். அம்மாக்களே, குழந்தைகளுடன் வாருங்கள். நல்ல பல பயனுள்ள தகவல்களை கேளுங்கள். அனுமதி இலவசம்.